பொதுத் தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கான அறிவிப்பு

🕔 September 6, 2020

டந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் பிரகடனப்படுத்த வேண்டிய கடைசி தினம் இன்றாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த வேட்பாளர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் அல்லது தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் விபரங்களை சமர்ப்பிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தோல்வியடைந்த வேட்பாளர்கள் தமது சொத்துக்களையும் பொறுப்புக்களையும் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்