மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

🕔 August 29, 2020

ருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்க காலத்திலும் கணிசமான மருந்துப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தமை நினைவுகொள்ளத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்