ராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த இன்றைய தினம் பதவியேற்பு
சுசில் பிரேமஜயந்த – ராஜாங்க அமைச்சராக இன்று புதன்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
கல்வி சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்களை மேம்படுத்துதல் மற்றும் தொலைக் கல்வி ராஜாங்க அமைச்சராக இவர் – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார்.
இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜெயசுந்தர ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஏற்கனவே 39 பேருக்கு ராஜாங்க அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், 40ஆவது ராஜாங்க அமைச்சராக சுசில் நியமிக்கப்பட்டுள்ளார்.