ஐ.தே.கட்சி தலைமைத்துவத்தில் மாகாண சபைத் தேர்தல் வரை, ரணில் இருப்பார்: செயலாளர் தெரிவிப்பு

🕔 August 16, 2020

க்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலுக்குப் பின்னர்தான், தனது பதவியில் இருந்து விலகுவார் என, கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் கரியவாசம் ரெிவித்துள்ளார்.

நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன், கட்சித் தலைமையகம் சிறிகொத்தவில் நடைபெற்ற சந்திப்பின்போதே, ரணில் விக்ரமசிங்க இந்த நிலைப்பாட்டை தெரிவித்ததாக, அகிலவிராஜ் காரியவசம் மேலும் கூறியுள்ளார்.

“இளைஞர்களிடம் தலைமைத்துவம் ஒப்படைக்க வேண்டும்” என்று இதன்போது கூறிய ரணில் விக்ரமசிங்க, மாகாண சபை தேர்தலின்போது பிரச்சாரம் செய்வதற்கான ஒரு புதிய வழிமுறை உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

அடுத்த வருடம் பிப்ரவரி – மார்ச் காலப்பகுதியில் மாகாண சபை தேர்தல் நடைபெறும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்