வேட்பாளர்கள் 54 பேர் உட்பட 115 பேரை,உறுப்புரிமையிலிருந்து நீக்க ஐ.தே.கட்சி தீர்மானம்

🕔 July 28, 2020

க்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து 115 பேரை நீக்குவதற்கு, அந்தக் கட்சியின் செயற்குழு அனுமதியளித்துள்ளது.

அதற்கிணங்க, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்களைச் சமர்ப்பித்த 54 பேரும், உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் 61 பேரும், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்படவுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்புரிமையிலிருந்து தான் உள்ளிட்ட 99 பேரை நீக்குவதென அந்தக் கட்சி எடுத்த முடிவை அமுல் செய்வதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மாவட்ட நீதிமன்றின் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மேல்மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவை, அந்த நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே, கடந்த 22ஆம் திகதி நிராகரித்திருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்