பணம் தராது விட்டால் வழக்குத் தொடுப்பேன் என அச்சுறுத்தி, லஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் கைது

🕔 July 21, 2020

ஞ்சம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் (எஸ்.ஐ) ஒருவரை லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ஹங்வெல்ல – கஹஹேன பகுதியில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் இவர் கைதாகியுள்ளார்.

மதுபான வர்த்தகர் ஒருவரிடம் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக அச்சுறுத்தி பணம் பெற்ற உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மிரிஹான சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவில் கடமையாற்றும் குறித்த உப பொலிஸ் பரிசோதகர், ஹொரன பகுதியினை சேர்ந்தவராவார்.

சம்பந்தப்பட்ட மதுபான வர்த்தகரிடம் மாதாந்தம் 05 ஆயிரம் ரூபாயை வழங்காவிட்டால், அவருக்கு எதிராக வழக்கு தொடரவுள்ளதாக, கைது செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி அச்சுறுத்தியுள்ளார்.

இதற்கமைய மதுபான வர்த்தகரிடம் குறித்த பணத்தை பொலிஸ் அதிகாரி பெற்றபோது லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்