அம்பாறை மாவட்டத்தில் இன்று றிசாட்: 04 பிரதேசங்களில் உரையாற்றுகிறார்

🕔 July 19, 2020

ம்பாறை மாவட்டத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை வருகை தரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன்; அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்றவுள்ளார்.

அந்த வகையில் மருதமுனை, அட்டாளைச்சேனை, நிந்தவூர் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேசங்களில் இன்றிரவு நடைபெறும் பகிரங்க தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் அவர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார் என, கட்சியின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளர் கே.எம். ஜவாத் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேர்தல் பிரசாரங்களிலிருந்து பின்வாங்கத் தீர்மானித்துள்ளதாக, சமூக வலைத்தளங்களில் பொய்யான செய்தியொன்று பரப்பட்டிருந்த நிலையில், மக்கள் காங்கிரஸ் தலைவர் அம்பாறை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்