தபால் கட்டணத்தை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு பிணை

🕔 July 19, 2020

பால் கட்டணத்தை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஆர். பீரிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடுவலை நீதவான் நீதிமன்றம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிணை வழங்கியுள்ளது.

50 இலட்சம் ரூபா பெறுமதியான 02 சரீர பிணையின் அடிப்படையில் அவரை விடுதலை செய்ய கடுவலை பதில் நீதவான் கமல் பிரசன்ன விஜேசிறி உத்தரவிட்டுள்ளார்.

01 லட்சத்து 13 ஆயிரத்து 460 ரூபாய் பெறுமதியான தபால் கட்டணத்தை முறைகேடாக பயனபடுத்திய குற்றச்சாட்டில், தலங்கம பொலிஸார் இவரைக் கைது செய்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்