பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

🕔 July 11, 2020

பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மொரட்டுவ, லுனாவ பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபரின் முச்சக்கரவண்டி பொலிஸார் சோதனையிட முற்பட்டபோது அதனைத் தடுத்ததாகவும், பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை தாக்க முயற்சித்ததாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்தே அவர் மீது துப்பாக்சிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

சம்பவத்தில் 39 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்