2,366 தேர்தல் முறைப்பாடு கிடைத்துள்ளதாக தெரிவிப்பு: 1933 க்கு அழைத்து மக்களும் புகாரளிக்கலாம்

🕔 July 9, 2020

நாடாளுமன்ற தேர்தல் நடவடிக்கை தொடர்பில் இதுவரை 2,366 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 644 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ மத்திய நிலையத்தில் 1,722 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதென தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இதேவேளை தேர்தல் சட்டத்தை மீறும் சம்பவங்கள் மற்றும் தேர்தல் வன்முறைகள் குறித்து பொதுமக்கள் புகாரளிக்க அவசர இலக்கங்களை பொலிஸார் வழங்கியுள்ளனர்.

1933 அல்லது 0112 47 2757 என்ற தொலைபேசி இலங்கங்களை அழைத்து, தேர்தல் வன்முறை தொடர்பில் முறையிடலாம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்