போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளருக்கு இடமாற்றம்

🕔 July 3, 2020

பொலிஸ் துறையின் கீழுள்ள போதை பொருள் ஒழிப்பு பணியகத்தின் பணிப்பாளர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த வெற்றிடத்துக்கு புதிய பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி சுஜித் வெதமுல்லவை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதியளித்துள்ளதாகவும் ஊடகப் பிரிவு கூறியுள்ளது.

போதைப் பொருள் வியாபாரிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தமை மற்றும் போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டுகளின் பேரில், போதைப் பொருள் ஒழிப்பு பணியகத்தின் 12 அதிகாரிகள் கைது செய்யப்பட்டு, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: போதைப் பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, போதைப் பொருள் பணியக அதிகாரிகளுக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்