ஐ.தே.கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமைக்கு இடைக்காலத் தடை: 22ஆம் திகதி நீதிமன்றம் தீர்மானம்

🕔 June 16, 2020

க்கிய தேசியக் கட்சி தனது உறுப்பினர்கள் 99 பேரை அங்கத்துவத்திலிருந்து நீக்கியமைக்கு இடைக்காலத் தடை விதிப்பதா இல்லையா என்பதை எதிர்வரும் 22ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த, தமது கட்சி உறுப்பினர்கள் 99 பெரின் அங்கத்துவங்களை ஐக்கிய தேசியக் கட்சி கட்சி நீக்கியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம், கட்சித் தலைவர் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கடந்த மாதம் 29ம் திகதி இடம்பெற்ற போது, குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

கட்சியின் இந்தத் தீர்மானத்துக்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு, பாதிக்கப்பட்டோர் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.

இதனையடுத்தே, இடைக்காலத் தடையை வழங்குவதாக இல்லையா என்பதை, 22ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்