ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச் சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிப்பு

🕔 June 16, 2020

நாடாளுமன்றத் தேர்தலலுக்கான ஐந்து மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இதுவரையில் அச்சிடப்பட்டுள்ளன என்று அரச அச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த வாக்குச்சீட்டுக்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

அநுராதபுரம், பொலன்னறுவை, மாத்தளை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் வாக்குச்சீட்டுக்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இன்னும் 04 மாவட்டங்களுக்கான வாக்குச்சீட்டுக்கள் இன்னும் இரண்டு நாட்களில் அச்சிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்ழுவிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அரச அச்சகர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்