பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொர்பில் கலந்துரையாடல் இடம்பெறுகிறது: வக்பு சபை பணிப்பாளர்

🕔 May 27, 2020

ள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக வக்பு சபை மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

மக்களின் சுகாதாரத்திற்கு அச்சுறுத்தல் இல்லாத வகையில்,  பள்ளிவாசல்களை மீளத் திறப்பது தொடர்பில் சுகாதார அமைச்சுடனும், கொவிட் – 19 தொடர்பான செயலணியுடனும் வக்பு சபை கலந்துரையாடி வருவதாக அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வக்பு சபையின் உத்தியோகபூர்வ அறிவிப்பு வரும் வரை இந்த விடயத்தில் பொறுமை காக்குமாறு அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் அனைத்தும் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்