கொரோனா: 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை; 1141 பேர் பாதிப்பு

🕔 May 25, 2020

கொரோனா நோயாளர்களைக் கண்டறியும் பொருட்டு, 54 ஆயிரத்து 834 பி.சி.ஆர் பரிசோதனைகள் இதுவரை (இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 06 மணி வரையில்) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவித்துள்ளது.

இதற்கிணங்க 1,141 பேர் இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணியகம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் 674 பேர் கொரோனா தொற்றிலிருந்து சுகமடைந்துள்ளனர். 458 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தின் பேரில் 97 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

உலகளவில் 54 லட்சத்து 18 ஆயிரத்து 513 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 03 லட்சத்து 44,207 பேர் மரணமடைந்துள்ளனர்.

உலகளவில் பாதிக்கப்பட்டோரில் 22 லட்சத்து 54,432 பேர் இதுவரை சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்