செவ்வாய் கிழமை தொடக்கம் இரவு 10 முதல் அதிகாலை 04 மணி வரை மட்டுமே ஊரடங்கு

🕔 May 23, 2020

நாட்டில் எதிர்வரும் செவ்வாய் கிழமையிலிருந்து நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நடைமுறைப்படுத்தப்படும் என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

செவ்வாய்கிழமையிலிருந்து நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் மற்றும் போக்குவரத்து கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளன.

மே 26ஆம் திகதி, செவ்வாய் தொடக்கம் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நாளாந்தம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும்.

செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கு அனுமதியும் அளிக்கப்படும்.

நாளை, 24ஆம் திகதி ஞாயிறு மற்றும் 25ஆம் திகதி திங்கள், ஆகிய இரு நாட்களும் நாடு முழுவதிலும் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்