காற்றில் மீண்டும் தூசு அதிகரித்துள்ளது: தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவிப்பு

🕔 May 17, 2020

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளியில் மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் சிரேஷ்ட நிபுணர் எச்.எஸ் பிரேமசிறி கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் ஏப்ரல் நடுப்பகுதியளவில் வளிமண்டலத்தில் காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்திருந்ததாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் அப்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டின் கடந்த 20 வருட கால வரலாற்றில் வளிமண்டல காற்றுமாசு வீதம் வெகுவாக குறைவடைந்த முதலாவது சந்தர்ப்பம் அதுவெனவும் தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அப்போது சுட்டிக் காட்டியிருந்தது.

இவ்வாறு மாசு குறைவடைந்திருந்த காற்றில், தற்போது மீண்டும் மாசு அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்திருக்கிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்