கொரோனா பாதிப்பு உயர்கிறது: நோயாளர்கள் 775, பலி எண்ணிக்கை 09
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 755 ஆக (இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் 2.00 மணி வரை) அதிகரித்துள்ளது.
அதேவேளை, மரண எண்ணிக்கையும் 09ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய தினம் கொழும்பு – முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 52 வயது பெண் ஒருவர் கொரோனாவினால் இறந்தார்.
அங்கொடை தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் மரணமானார்.
எவ்வாறாயினும் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 197 பேர் இதுவரையில் சுகமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, 35 லட்சத்து 85,512 பேர் இதுவரையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.