கொரோனாவுக்கு நாட்டில் முதல் பெண் பலி: உயிரிழந்தோர் எண்ணிக்கை 08ஆக உயர்வு

🕔 May 4, 2020

கொரோனா தொற்று காரணமாக பெண் ஒருவர் இன்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார். அந்த வகையில், நாட்டில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08ஆக அதிகரித்துள்ளது.

ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இந்தப் பெண் உயிரழந்துள்ளார்.

இவர் குருநாகல் மாவட்டத்திலுள்ள பொல்பித்திகம எனும் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே இந்தப் பெண் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகியிருந்ததாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனாவினால் நாட்டில் உயிரிழந்த முதலாவது பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் உடல் சற்று முன்னர் கொட்டிகாவத்தை மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்