தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் பயணித்த வாகனங்கள் விபத்து; ஒருவர் பலி

🕔 April 15, 2020

னிமைப்படுத்தல் நிலையத்துக்கு ஆட்களை ஏற்றிச்சென்ற இரண்டு பஸ்கள் லொறி ஒன்றுடன் மோதியதில் – லொறியின் சாரதி உயிரிழந்துள்ளார்.

சம்பூர் நோக்கி சுமார் 100 நபர்களை ஏற்றிச்சென்ற மூன்று பஸ்களில், இரண்டு பஸ்கள், கொழும்பு நோக்கி பயணித்த மரக்கறிகளை ஏற்றிச்சென்ற லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ன.

இந்த விபத்தில் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அழைத்துசெல்லப்பட்டவர்கள் என்றும் ஏனைய மூவரும் கடற்படை வீரர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

விபத்தினை அடுத்து, தனிமைப்படுத்தலுக்கு அழைத்துசெல்லப்பட்ட மூவர் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களில் இருவர் பின்னர் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்