கொரோனாவை மத ரீதியாக அணுகக் கூடாது: உலக சுகாதார அமைப்பு வலியுத்தல்

🕔 April 8, 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை மதம், இனம் எனும் அடிப்படையில்அணுகக்கூடாது என உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தியாவில் மத ரீதியாக நடத்தப்பட்ட ஒன்று கூடலொன்றில் கலந்து கொண்டவர்களால் கொரோனா பரவியமை குறித்து உலக சுகாதார அமைப்பின் (அவசரகால திட்டங்கள்) பணிப்பாளர் மைக் ரயானிடம் ஊடக சந்திப்பொன்றில் கேட்கப்பட்ட போதே, அவர் மேற்படி விடயத்தைக் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகயைில்; “கோவிட் 19 வைரஸ் யாருடைய தவறும் இல்லை. ஒவ்வொரு நோயாளியும் பாதிக்கப்பட்டவராகவே அணுகப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களை மத, இன அடிப்படையில் பிரிக்கக்கூடாது. அதனால் எந்த பயனும் இல்லை,” என்றார்.

இந்தியாவில் மதத்துடன் கொரோனா வைரஸ் சம்பந்தப்படுத்தப்பட்டு ‘கொரோனா ஜிகாத்’ போன்ற பதங்கள் இணையத்தில் ட்ரெண்டானது.

இந்தியாவில் தப்லிக் ஜமாத் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள் வேண்டுமென்றே பொலிஸ் மீது எச்சில் துப்புவது போன்ற போலி வீடியோகளும் பகிரப்பட்டுள்ளன.

உலக சுகாதார அமப்பின் பணிப்பாளர் மைக் ரயான் மேலும் கூறுகயைில்; “மத வழிபாட்டு காரணங்கள் அல்லது வேறு காரணங்களாக இருந்தாலும் மக்கள் அதிகம் கூடுவது ஆபத்தானது. உலக சுகாதார நிறுவனம் இது குறித்த வழிகாட்டல்களை வழங்கி உள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தலையீட்டுக்குப் பின்னர், பலகூட்டங்கள் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன அல்லது ஒத்திவைக்கப் பட்டிருக்கின்றன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்