தெஹிவளையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கொரோனா தொற்று காரணமாக மரணம்

🕔 April 7, 2020

கொரோனா தொற்று காரணமாக நாட்டில் இன்னுமொருவர் மரணமடைந்துள்ளார்.

நாட்டில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட 06வது மரணம் இதுவாகும்.

இவ்வாறு மரணித்தவர் தெஹிவளை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் இதுவரை 180 பேர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாக (செவ்வாய்கிழமை காலை 11 மணி வரை) சுகாதார மேம்பாட்டுப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவர்களில் 38 பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் 13 லட்சத்து 47,566 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 74,780 பேர் மரணமடைந்துள்ளனர்.

எவ்வாறாயினும், உலகளவில் கொரோனா தொற்று காரணமாக பாதிப்படைந்தவர்களில் 02 லட்சத்து 85,101 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்