யாழ்ப்பாணம் மாவட்டத்தில், மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் தொடரும்: அரசாங்கம் அறிவிப்பு

🕔 March 26, 2020

ட மாகாணத்தின் – யாழ்ப்பாண மாவட்டத்தில் இப்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஆயினும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் ஏற்கனவே அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் நாளை வெள்ளிக்கிழமை, காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு, மீண்டும், அதே தினம், மதியம் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

பின்னர் இந்த நான்கு மாவட்டங்களிலும் திங்கட்கிழமை (30ஆம் திகதி) காலை 6:00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம், மீண்டும் அதேதினம், பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.

வடக்கில், யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டுமே ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்