அம்பாறையில் இணைந்து போட்டியிட வருமாறு, மு.காங்கிரஸ் மன்றாட்டம்: தனித்துப் போட்டியிடுவதில் றிசாட் உறுதி

🕔 March 17, 2020

– அஹமட் –

நாடாளுமன்றத் தேர்தலில் தம்முடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் சஜித் பிரேமதாஸ தமைமையிலான தொலைபேசி சின்த்தில் போட்டியிட வருமறு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ந்தும் மன்றாடி வருவதாக அறிய முடிகிறது.

இதற்காக, அம்பாறை மாவட்டத்திலுள்ள சில உலமாக்களை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் கொழும்புக்கு அழைத்து, அவர்களை மக்கள் காங்கிரஸ் தலைவரிடம் பேச வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இதேவேளை, அவ்வாறு கூட்டிணைந்து போட்டியிடும் போது, முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூன்று வேட்பாளர்களையும், மக்கள் காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளரையும் நிறுத்துவதென்றும் மு.கா. தலைவர் ஹக்கீம் நிபந்தனை விதித்துள்ளார்.

இந்த நிலையில் மு.காங்கிரஸின் கோரிக்கைக்கு இணங்க மறுத்துள்ள – மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன்; அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிடுவதற்குத் தீர்மானித்துள்ளார் எனவும் அறிய முடிகிறது.

அம்பாறை மாவட்டத்தில் மயில் சின்னத்தில் போட்டியிடும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ். ஹமீட் தலைமையில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத், நிந்தவூர் பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ. தாஹிர், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர், ஊடகவியலாளர் முஷர்ரப் உள்ளிட்ட பலர் வேட்பாளர்களாகக் களமிறங்கவுள்ளனர் எனவும் அறிய முடிகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்