ஐ.தே.கட்சி 22 மாவட்டங்களிலும் போட்டியிடும்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு அகில கடிதம்

🕔 March 7, 2020

திர்வரும் பொதுத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் என்று, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு ஐ.தே.கட்சியின் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் கடிதம் மூலம் அறிவித்துள்ளார். 

இதேவேளை சஜித் பிரேமதாஸ தலைமையிலான ‘ஐக்கிய மக்கள் சக்தி’ எனும் கூட்டணியும் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளது.

தொலைபேசி சின்னத்தில் ஐக்கிய மக்கள் சக்தி போட்டியிடும் என்று, முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

சஜித் தலையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கு, யானைச் சின்னத்தை வழங்குவதாயின், ரணில் அணியைச் சேர்ந்த ஒருவரை அந்தக் கூட்டணியின் செயலாளராக நியமிக்க வேண்டும் என, ரணில் தரப்பு நிபந்தனை விதித்துள்ளது.

ஆனால், இதற்கு சஜித் அணி சம்மதிக்கவில்லை எனக் கூறப்படுறிது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்