பௌத்த அடிப்படைவாதத்தை பரப்ப, பொதுபல சேனாவுக்கு நோர்வே பணம் வழங்கியது; விஜேதாஸவின் குற்றச்சாட்டுக்கு டிலந்த மறுப்பு

🕔 February 29, 2020

நோர்வே அரசிடம் நிதியை பெற்றுக்கொண்டு, பொதுபல சேனா அமைப்பு, இலங்கைக்குள் பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ சுமத்தியுள்ள குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது என, பொதுபல சேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் விஜேதாஸ ராஜபக்ஷ வழங்கிய வாக்குமூலம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக பகிரங்க விவாதத்துக்கு வருமாறும் விஜேதாஸ ராஜபக்ஷவுக்கு டிலந்த சவால் விடுத்துள்ளார்.

அத்துடன் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்பிக்குமாறும் அவர் அவர் கேட்டுள்ளார்.

விஜேதாஸ கூறியது என்ன?

பௌத்த அடிப்படைவாதத்தை பரப்புவதற்காக பொதுபல சேனா அமைப்புக்கு நோர்வே நிதி வழங்கியது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ கூறியிருந்தார்.

நீதியமைச்சராக தான் பதவி வகித்த காலத்தில் இது தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், விஜேதாஸ இந்தக் குற்றச்சாட்டைக் கூறியிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்