யானை இல்லாவிட்டால் போட்டியிட மாட்டேன்: நவீன் திஸாநாயக்க

🕔 February 13, 2020

யானை சின்னத்தை தவிர – வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என்று, நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான நவீன் திஸாநாயக்க  தெரிவித்துள்ளார்.

பொதுக் கூட்டணியின் சின்னம் தொடர்பாக கட்சியின் செயற்குழு எடுக்கும் தீர்மானமே இறுதியானது என்றும் கட்சி உறுப்பினர்களுக்கு சின்னம் தொடர்பாக தீர்மானம் எடுக்க எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று வியாழக்கிழமை நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

சின்னத்தை மாற்றுவது தொடர்பில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடமளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய சின்னத்தில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் அதனை பழக்கப்படுத்த காலம் எடுக்கும் என்றும், இதனால் கிடைக்கவுள்ள வாக்குகளை கூட இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட மக்கள் யானை சின்னத்தில் வாக்களிக்க பழகியுள்ளதால், வேறு சின்னத்தை முன்வைத்தால் குழப்ப நிலை தோன்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்