அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு; திங்கட்கிழமை ஆரம்பம்
தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரப்புவதற்குரிய நேர்முகத் தேர்வு நாளை மறுதினம் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
278 தேசிய பாடசாலைகளுக்கான அதிபர் வெற்றிடத்தை நிரம்பும் வகையில், எதிர்வரும் 28 ஆம் திகதி வரை, இந்த நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது.
373 தேசிய பாடசாலைகளில் 274 தேசிய பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர்கள் இல்லையென கல்வி, விளையாட்டுத்துறை, இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறியுள்ளார்.
கடந்த மூன்று வருட காலப்பகுதியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வெற்றிடங்கள் அதிகளவில் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் அளவில் அந்த வெற்றிடங்கள் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.