சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை

🕔 December 16, 2019

மைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு நிதியமைச்சு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிணங்க சிற்றூழியர்கள் மற்றும் அலுலக உதவியாளர்களை நியமிக்க முடியாது.

அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்களை வழங்குவதை தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஏதேனும் அத்தியவசிய நியமனங்கள் இருப்பின் அவை திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில் சில அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் தமது வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை திறைசேரிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்