விமல், ரத்ன தேரருக்கு எதிரான முறைப்பாடு தொடர்பில், முன்னாள் அமைச்சர் றிசாட் வாக்கு மூலம்

🕔 July 2, 2019

நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோருக்கு எதிராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான றிசாட் பதியுதீன் – பொலிஸ் தலைமையகத்தில்  செய்திருந்த முறைப்பாடு தொடர்பில் – இன்றைய தினம் வாக்கு மூலம் ஒன்றினை வழங்கினார். 

விமல் வீரவன்ஸ மற்றும் எஸ்.பி திஸ்ஸாநாயக்க ஆகியோர் தொடர்ச்சியாக ஊடகங்கள் வாயிலாக தன்மீது சுமத்தி வந்த அவதூறுகள் தொடர்பில், முன்னாள் அமைச்சர் பொலிஸ் தலைமையகத்தில் ஏற்கனவே முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையிலேயே, திட்டமிடப்பட்ட குற்றங்களை தடுக்கும் பிரிவுற்குச் சென்று இன்று சென்று, அவர் வாக்கு மூலம் வழங்கினார்.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த றிசாட் பதியுதின்;

“என் மீது சுமத்தப்பட்டு வரும் அத்தனை குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை. பொலிஸ் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தெளிவான அறிவிப்பு ஒன்றை விடுத்த பின்னரும் இவர்கள் வேண்டுமென்றே எனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்து வருகின்றனர்” என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்ன தேரரும் – திரும்ப திரும்ப ஒரே அவதூறை சுமத்தி வருவதாகவும் முடிந்தால் அவர் பொலிஸில் முறையிட்டு தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதே தர்மம் எனவும் முன்னாள் அமைச்சர் றிசாட் மேலும தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்