ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு: சட்ட மா அதிபர் மீளப்பெற்றார்

🕔 November 23, 2018

ஞானசார தேரருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்முறையீட்டு வழக்கு ஒன்றினை இன்று வெள்ளிக்கிழமை சட்ட மா அதிபர் மீளப்பெற்றுள்ளார்.

மாலபே பிரதேசத்தில் உள்ள கல்வாரி கிறிஸ்துவ ஆலயமொன்றில் இருந்தவர்களைத் தாக்கி, சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தியமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இச்சவம்பவம் 2008 ஆம் ஆண்டு நடைபெற்றது.

சந்தேகநபர்களை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவித்து, விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், குறித்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வதில்லை என்றும், வழக்கை வாபஸ் பெறுவதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு இன்று தெரிவிக்கப்பட்டது.

அதன்படி சட்டமா அதிபரின் கோரிக்கையை ஏற்ற மேன்முறையீட்டு நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதிப்படுத்தி உத்தரவிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்