நாடாளுமன்றம் இன்றிரவு கலையலாம்

🕔 November 7, 2018

நாடாளுமன்றம் இன்று புதன்கிழமை இரவு கலைக்கப்படலாம் என, ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரவித்துள்ளார்.

சட்டவிரோத சதி முயற்சியால், முழு நாட்டையும் குழப்பத்தில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி​பால சிறிசேனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷம், இரண்டாவது சட்டவிரோத சதிக்காக கூடியதாகவும் அவர் கூறியுள்ளார்.

“நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லாமல் சட்டவிரோதமாக பிரதமரை நியமித்து, அமைச்சரவை ஒன்றை உருவாக்கிய மைத்திரி- மஹிந்த தரப்பினர், தற்போது, நாட்டின் அரசியலமைப்பை முற்றாக மீறும் வகையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முயற்சிக்கின்றனர்.

சில வேளைகளில் இன்று இரவு கூட நாடாளுமன்றம் கலைக்கப்படலாம்.

நாடாளுமன்றம் 14ஆம் திகதி கூடும் போது தனக்கு ஏற்படவுள்ள அவமானத்தை தவிர்ப்பதற்காக, இப்போது 02ஆவது சட்டவிரோத அரசியல் சதித்திட்டத்தை முன்னெடுக்க முயற்சிக்கின்றனர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்