ஒரு கிலோ 200 கிராம் நகையுடன், நபரொருவர் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

🕔 October 17, 2018

பெருந்தொகையான நகைகளை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கடத்த முயன்ற ஒருவர் நேற்று செவ்வாய்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

அவுஸ்ரேலிய கடவுச் சீட்டை வைத்திருந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர் கடத்த முயற்சித்த நகைகளின் எடை, 01 கிலோ 200 கிராம் எனத் தெரியவருகிறது.

அவுஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் ஊடாக இலங்கைக்கு வருகை தந்த  நிலையிலேயே, மேற்படி நபரை சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இவரிடமிருந்து 65 தங்க மாலைகள் மற்றும் 06 வளையல்கள் உட்பட பெருமளவிலான நகைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த நகைகளின் பெறுமதி 66 லட்சத்து 35 ஆயிரத்து 610 ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்