மஹிந்தவுடன் இணையும் நோக்கங்கள், சுதந்திரக் கட்சிக்கு இல்லை: அமைச்சர் அமரவீர

🕔 October 14, 2018

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஷவுடன் இணையும் நோக்கங்கள் எவையும் என்று, அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்திலிருந்து விலகி இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கான எவ்விதமான அரசியல் நெருக்கடிகளும் தற்போது ஏற்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, தேசிய  அரசாங்கத்துடன் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு இணைந்து கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பத்துடன் இணைந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியினர், ஐக்கிய தேசியக் கட்சியுடன் உறவினை முறித்துக் கொண்டு, மஹிந்த ராஜபக்ஷவுடன் சேர்ந்து இடைக்கால அரசாங்கமொன்றினை அமைப்பதற்கான பேச்சுக்கள் இடம்பெறுவதாக, அரசியல் அரங்கில் பேச்சுக்கள் எழுந்துள்ள நிலையிலேயே, அமைச்சர் அமரவீர, மேற்கண்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்