யுவதியின் வயிற்றுக்குள் ஒன்றரை கிலோ முடி: கல்முனை வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது

🕔 August 25, 2018

– யூ.எம். இஸ்ஹாக் –

ல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட யுவதி ஒருவரின் ஒருவரின் உணவுக்கால்வாயில் இருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடையுடைய தலைமுடி – சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளது .

இச்சம்பவம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம் பெற்றது.

17 வயதுடைய யுவதி ஒருவர் தொடர்ந்து வாந்தி நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலை சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் ஏ.டப்ளியூ. சமீம் நோயாளியை சோதனைக்குட்படுத்திய போது அவருடைய வயிற்றின் உட்பகுதியில் கட்டி போன்று தென்பட்டுள்ளது.

பின்னர், நோயாளியின் இரைப்பை பகுதியை எண்டஸ்கோபி கமரா மூலம் சோதனை செய்த சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சமீம், நோயாளியின் உணவுக்கால்வாயில் தலை முடி இருப்பதை உறுதி செய்தார். இதனையடுத்து, அவசரமாக நோயாளியை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தினார்.

இதன்போதே நோயாளியின் வயிற்றிலிருந்து சுமார் ஒன்றரைக் கிலோ எடை கொண்ட முடி அகற்றப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு சம்பவம் – தனக்கு, முதல் அனுபவம் என்றும் இலங்கையில் இவ்வாறானதொரு சத்திர சிகிச்சை இடம் பெற்றதாக தான் அறியவில்லை எனவும் சத்திர சிகிச்சை நிபுணர் சமீம் தெரிவித்தார் .

இந்த சத்திர சிகிச்சை தொடர்பில் டொக்டர் சமீம்ட மேலும் கூறுகையில்; “இந்த முடியானது நோயாளியின் இரைப்பை, முன் சிறுகுடல் மற்றும் சிறு குடல் வடிவில் அமையப்பெற்றுக் காணப்பட்டிருந்தது. இவர் பல நாட்களாக முடியை உட்கொண்டிருக்க வேண்டும். பொதுவாக மிருகங்களுக்கே இவ்வாறான முடி அடைப்பு நிகழ்வுகள் நடக்கின்றன.

மனிதர்கள் இவ்வாறு முடியை உட்கொள்வது மிகவும் அரிதாகும். உள நோயாளர்களே இவ்வாறு முடியை உட்கொள்கின்றனர்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்