அஞ்சலி செலுத்தச் சென்ற இடத்தில், மைத்திரி – மஹிந்த சந்திப்பு

🕔 August 25, 2018

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய சகோதர் சந்ர ராஜபக்ஷவின் உடலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினார்.

ஹம்பாந்தோட்ட மெதமுலானவில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி சிறிசேன அங்கு சென்ற போது, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்றனர்.

இதன்போது,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அங்கிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பேசியுள்ளார்.

கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப் பட்டிருந்த சந்ரா ராஜபக்ஷ, கடந்த செவ்வாய்கிழமை தனது 70ஆவது வயதில் மரணமானார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்