உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பின் போது, நாஜிமுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

🕔 July 28, 2018

 – முன்ஸிப் –

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு கொழும்பில் இன்று  சனிக்கிழமை நடைபெற்ற போது, பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் குழுவொன்று, அங்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் நாஜிமுக்கு எதிராகவே, இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது.

முன்னாள் உபவேந்தர் நாஜிமை, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக மீண்டும் தெரிவு செய்யக் கூடாது என்றும், அவர் உபவேந்தராகத் தெரிவானால் பல்கலைக்கழகம் மோசமானதொரு நிலைக்குச் சென்று விடும் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கு கோசமிழுப்பியுள்ளனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வாக்களிப்பு நிறைவுபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: தெ.கி.பல்கலைக்கழக புதிய உபவேந்தர் தெரிவுக்கான வாக்கெடுப்பு: பேராசிரியர் நாஜிம் முன்னிலை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்