மஸ்தானின் ‘தளபதி’, றிசாத்துடன் கைகோர்த்தார்

🕔 July 10, 2018

ன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதியமைச்சருமான காதர் மஸ்தானின் அரசியல் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய மௌலவி எம்.கே. முனாஜித் (சீலானி), அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இன்று செவ்வாய்கிழமை இணைந்து கொண்டார்.

இவருடன் அபூபக்கர் முஹம்மது இர்ஷாட் மௌலவியும் அமைச்சர் றிஷாட்டின் அரசியல் பயணத்தில் கைகோர்த்துக் கொண்டார்.

அமைச்சர் றிஷாட்டுடன் இணைந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவித்த முனாஜித் மௌலவி; “அமைச்சர் றிஷாட் பதியுதீனுடன் இணைந்து மக்கள் பணிகளுக்காக தன்னை தொடர்ந்தும் அர்ப்பணிப்பேன்” என்றார்.

பல்வேறு சவால்களுக்கும் சதிகளுக்கும் மத்தியில் சேவையாற்றி வரும் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலேயே தான் இந்த முடிவை  மேற்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

(அமைச்சரின் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்