சு.கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியதால் வந்த வினை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய செயலாளருக்கு வாய் தடுமாறியமையினால், “ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தை அமைப்போம்” என்று தெரிவித்த சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றது.
சு.கட்சியின் புதிய செயலாளராக ரோஹன லக்ஷமன் பியதாஸ, முதன்முதலில் ஊடகங்களுடன் பேசும் போது, இந்த நிலை ஏற்பட்டது.
எவ்வாறாயினும் தனது தவறை புரிந்து கொண்ட புதிய செயலாளர்; “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன” என்று உடனடியாக மாற்றிக் கூறினார்.
இதன்போது தொடர்ந்து பேசிய புதிய செயலாளர்; தேசிய நலன்களைப் பாதுகாக்கும் வகையில் சுதந்திரக் கட்சி முன்னெடுத்துச் செல்லப்படும் என்றும் தெரிவித்தார்.