கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளுக்கு பிணை
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகமவின் மனைவியும் மகளும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
பெண்ணொருவரை தாக்கியதாகக் கூறப்படும் வழக்கில் குறித்த இருவரையும் கைது செய்யுமாறு கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து இன்று திங்கட்கிழமை மேற்படி இருவரும் நீதிமன்றில் சரணடைந்ததை அடுத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.