தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு, டக்ளஸ் விருப்பம்

🕔 August 26, 2015

Douglas Devananda  - 01.பி.டி.பி. எனப்படும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியானது, தேசிய அரசாங்கத்தில் இணைந்துகொள்வதற்கான விருப்பத்தினைத் தெரிவித்துள்ளது.

ஈ.பி.டி.பி.யின்  தலைவர் டக்ளஸ் தேவனந்தா – அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரைச் சந்தித்து, தேசிய அரசாங்கத்தில் தமது கட்சி இணைந்து செயற்படும் விருப்பத்துடன் உள்ளமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதியை டக்ளஸ் தேவானந்தா சந்தித்தமையினை, தேவானந்தாவின் ஊடக செயலாளர் நெல்சன் எதிரிசிங்கவும் உறுதிப்படுத்தியுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்