சம்மாந்துறையை கைப்பற்றியது மக்கள் காங்கிரஸ்; மீண்டும் தவிசாளரானார் நௌசாட்

🕔 March 27, 2018

ம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளராக ஏ.எம்.எம். நௌசாட் மீண்டும் தவிசாளராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அந்த சபையைக் கைப்பற்றியுள்ளது.

சம்மாந்துறை பிரதேச சபையின் முதலாவது அமர்வு, சபையின் மண்டபத்தில் இன்று செவ்வாய்கிழமை காலை இடம்பெற்றது.

இதன்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளதுடன், சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த ஏ.எம்.எம். நௌசாட் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை பிரதித் தவிசாளராக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வி. ஜெயச்சந்திரன் தெரிவானார்.

தவிசாளர் மற்றும் பிரதித் தவிசாளர் ஆகியோருக்காக இடம்பெற்ற வாக்கெடுப்பில், ஆளுங்கட்சியான மக்கள் காங்கிரஸ் – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கூட்டுக்கு ஆதரவாக 12 வாக்குகள் பெறப்பட்டன.  எதிராக முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த 08 உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உயர் மட்டத்தவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவை அடுத்தே, சம்மாந்துறை பிதேச சபையில் இந்தக் கூட்டாட்சி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்