கைத் துப்பாக்கி காட்டி களேபரம் செய்த, அழகான சுவர்ணக்கா: 13 வரை, விளக்க மறியலில்
தென் மாகாண சபை உறுப்பினர் எம்.கே. கசுன் மற்றும் அவரின் மனைவி ஆகியோர், தனியார் பஸ் சாரதி ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில், எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பில் இவர்கள் இருவரையும் தலங்கம பொலிஸார் நேற்று சனிக்கிழமை கைது செய்து, கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே, அவர்களை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தென் மாகாண சபை உறுப்பிரின் மனைவி, கைத்துப்பாக்கியுடன் பேருந்து சாரதியை தாக்கும் காட்சி ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
சம்பவ இடத்திலிருந்த நபரொருவர் தனது கைத்தொலைபேசியில் அந்த தாக்குதலை வீடியோவாக பதிவு செய்திருந்தார்.
இதனையடுத்து தென் மாகாண சபை உறுப்பினின் மனைவியினுடைய புகைப்படங்கள் இணையங்களில் தற்போது பரவி வருகின்றன.
தென் மாகாண சபை உறுப்பினர் கசுனின் அழகான மனைவிக்குள், இப்படியொரு கர்ண கொடூரமான சுவர்ணக்கா குடியிருப்பது ஆச்சரியம்தான்.