167 சபைகளின் ரிமோட் கன்ட்ரோல் எம்மிடம்தான் உள்ளது; அமைச்சர் அமரவீர
நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் படி, 167 சபைகளை இயக்கும் ‘ரிமோட் கன்ட்ரோல்’ தமது கட்சியிடமே உள்ளது என, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.
நடைபெற்று முடிந்த 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தலில், எந்த சபையில் எந்த கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், 1 67 சபைகளை இயக்கும் சக்தி தங்களிடமே இருப்பதாகவும் அவர் இதன்போது விபரித்தார்.