ஐ.தே.க. தலைவராக சஜித் அல்லது கரு நியமிக்கப்பட வேண்டும்: முன்னாள் செயலாளர் திஸ்ஸ

🕔 February 18, 2018

ஜித் பிரேமதாஸ அல்லது கரு ஜயசூரியவை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக நியமித்தால், அந்தக் கட்சி மீண்டும் வெற்றி நோக்கிப் பயணிக்கும் என்று, ஐ.தே.கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அவ்வாறு தலைமைத்துவ மாற்றம் ஏற்பட்டால், அந்தக் கட்சியில் மீண்டும் – தான் இணையவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மாவனல்லையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே, அவர் இதனைக் கூறினார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்படும் போது, அந்தக் கட்சி வெற்றி நோக்கி மீண்டும் பயணிப்பதற்கான சந்தர்ப்பமொன்று உருவாகும் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்