ஆளுநர் அலுவலகம் முன்பாக, தொண்டர் ஆசிரியர்கள் போராட்டம்

🕔 February 7, 2018
– பாறூக் ஷிஹான் –

ட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொண்டராசிரியர்கள் இன்று புதன்கிழமை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

நேற்று முன் தினம் ஒரு தொகுதி தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனங்கள் ஆளுநர் அலுவலக்கதில் வழங்கப்பட்டன.

இந்த நிலையில், பதிவுகளில் குறைபாடுகள் உள்ளன எனக் காரணம் தெரிவித்து, ஒரு தொகுதி தொண்டராசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

எனவே, தமக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்து நிரந்தர நியமனம் கிடைக்கப் பெறாத தொண்டராசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்