19 க்கு எதிராக, கை தூக்கியவர் ‘அவுட்’

🕔 August 19, 2015

Sarath weerasekara - 08– முன்ஸிப் –

.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட முன்னாள் பிரதியமைச்சர் சரத் வீரசேகர, நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் தோல்வியடைந்துள்ளார்.

19 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்துக்கான பிரேரணை – நாடாளுமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, அதனை எதிர்த்துக் கைதூக்கிய ஒரே உறுப்பினர் சரத் வீரசேகர என்பது நினைவுகொள்ளத்தக்கது.

இலங்கை கடற்படையில் ரியர் அட்மிரல் பதவி வகித்த இவர், அப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணியினூடாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அந்தத் தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட அனைத்து கட்சி வேட்பாளர்களை விடவும் 54,373 எனும் அதிகூடிய விருப்பு வாக்குகளை இவர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும், இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில், சரத் வீரசேகர தோல்லியடைந்துள்ளார். இவர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தீவிர விசுவாசியாவார்.

இதேவேளை, 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், ஐ.ம.சு.முன்னணி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு, முதலாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சரத் வீரசேகர மற்றும் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் இம்முறை தோல்வியை தழுவியுள்ள நிலையில், அந்தத் தேர்தலில் மூன்றாவது அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற சிறியானி விஜேவிக்கிரம, இம்முறை நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்