நூறாண்டு வாழ்ந்த தமிழர், யாழ்ப்பாணத்தில் மரணம்

🕔 February 5, 2018
– பாறுக் ஷிஹான் –

யா
ழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த 101 வயதுடைய முதியவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுகவீனம் காரணமாக உயிரிழந்தார்.

சாவகச்சேரி தனக்களைப்பை பிறப்பிடமாக கொண்டவரும் கலாசாலை வீதி , திருநெல்வேலியை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா நமசிவாயம் என்பவரே உயிரிழந்தவராவர்.

ஓய்வு பெற்ற கிராம சேவையாளரான மேற்படி முதியவர் 1917 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் திகதி பிறந்தார். இவர் கடந்த ஆண்டு தனது 100 ஆவது பிறந்த நாளை தனது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள், பூட்டி பிள்ளைகளுடன் கொண்டடி மகிழ்ந்தார்.

இவருக்கு 11 பிள்ளைகளும் , 33 பேரப்பிள்ளைகளும் , 12 பூட்டிப் பிள்ளைகளும் உள்ளனர்.
கடந் கடந்த ஓரிரு மாதங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில், நேற்றைய தினம் மதியம் இவர் உயிரிழந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்