ஒன்றுக்கு அதிகமான புள்ளடிகள் இருந்தால் நிராகரிக்கப்படும்

🕔 January 10, 2018

திர்வரும் உள்ளுராட்சி சபைக்கான தேர்தலின்போது, ஒன்றுக்கு மேற்பட்ட புள்ளடிகள் இடப்படும் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்படும் என, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

தேர்தல்கள் செயலகத்தில் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.

உள்ளுராட்சித் தேர்தலின் போது வழங்கப்படும் வாக்குச் சீட்டில் ஒரு புள்ளடி மட்டுமே இட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

குறித்த வாக்குச் சீட்டுகள் – விருப்பு வாக்களிப்பதற்கான இடைவெளிகள் இன்றி காணப்படும் எனத் தெரிவித்த ஆணையாளர், வாக்களார் தேர்வு செய்யும் கட்சி அல்லது சுயேட்சைக் குழுவுக்கு எதிரே புள்ளடி ஒன்றினை மட்டுமே இட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்