நீங்கள் ஒட்டினால், நாங்களும் ஒட்டுவோம்: மஹிந்த தேசப்பிரிய சவால்

🕔 December 19, 2017

ள்ளுராட்சி தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் ஒட்டப்பட்டால், அவற்றின் மேல், தேர்தல்கள் ஆணைக்குழுவின் சுவரொட்டிகள் ஒட்டப்படுமென, தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபை தேர்தல்கள் தொடர்பான பிரசார சுவரொட்டிகளை ஒட்டுவதற்கு, தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது. இந்தத் தடையினையும் மீறி ஒட்டப்பட்டால், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தல்கள் அடங்கிய சுவரொட்டிகள், அவற்றின் மேல் ஒட்டப்படும் என்று, ஆணையாளர் கூறினார்.

இதேவேளை, பரிசுப் பொருட்களுக்காக வாக்குகளை வழங்க வேண்டாம் என்றும், பொதுமக்களை ஆணையாளர் கேட்டுக் கொண்டார்.

குறிப்பாக, தேர்தல் காலத்தில் பாடசாலைக் கட்டடங்கள் திறந்து வைக்கப்பட்டால், அவற்றினை நம்பி வாக்களிக்க வேண்டாம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்